search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி விருத்தாசலம் பூதாமூரில் பொதுமக்கள் சாலைமறியல்
    X

    குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி விருத்தாசலம் பூதாமூரில் பொதுமக்கள் சாலைமறியல்

    விருத்தாசலம் பூதாமூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் பூதாமூரில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல வீதிகள் உள்ளன. இதில் ஆர்.கே.ஆர் நகர் பகுதியில் சிதம்பரம் விருத்தாசலம் மெயின் ரோட்டில் மற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இப்பகுதி மக்களின் வசதிக்காக விருத்தாச்சலம் தெற்கு பெரியார் நகர், தங்கம் நகர், பெருமாள் கோவில் பகுதியில் இருந்து ஆழ்துளை மோட்டார் மூலம் நேரடி குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் இணைப்பின் மூலம் காலை மற்றும் மாலை வேலைகளில் பொது மக்கள் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.

    நேரடி இணைப்பு என்பதால் அழுத்தம் தாங்காமல் குடிநீர் வரக்கூடிய குழாய் ஆங்காங்கே சேதமடைந்து தண்ணீர் வீணாகி வந்தது.

    ஆர்.கே.நகர் பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்தனர். மேலும் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விருத்தாசலம் சிதம்பரம் சாலையில் பூதாமூர் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 8 மணியிலிருந்து 8.30 மணி வரை அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் கிடைத்து விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி உரிய அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பெயரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    Next Story
    ×