search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலையில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்பு
    X

    உடுமலையில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

    உடுமலையில் அறிஞர் அண்ணா 110-வது பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அறிஞர் அண்ணா 110-வது பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர்உடுமலை ராதாகிருஷ்ணன் பேசும்போது,

    அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாமானியரும் முதல்-அமைச்சர் ஆகும் வாய்ப்பு உள்ளது. பேரறிஞர் அண்ணாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதிமுக தான் என்றார்.

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பொதுகூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    Next Story
    ×