search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்றால் 8 வழிச்சாலை திட்டத்தை தொடர மாட்டோம் - மத்திய அரசு
    X

    சுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்றால் 8 வழிச்சாலை திட்டத்தை தொடர மாட்டோம் - மத்திய அரசு

    சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்கவில்லை என்றால் 8 வழிச்சாலை திட்டத்தை தொடரமாட்டோம் என மத்திய அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. #ChennaiSalemExpressway #MadrasHC
    சென்னை:

    சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆய்வு செய்யாமல் செயல்படுத்தப்படுவதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த முறை விசாரணையின் போது, 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    மேலும், சமூக பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை எந்த நிலையில் உள்ளது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதனை அடுத்து கடந்த 14-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, திட்டத்துக்கு நிலம் கையப்படுத்த காலக்கெடு ஏதும் நிர்ணயிக்காமல் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தனர். 

    இந்நிலையில், இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சாலைக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக 1200 மரங்கள் நட இருய்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமல் சட்டப்படி திட்டத்தை தொடர முடியாது, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி அவசியம் என மத்திய அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

    விசாரணையின் போது, திட்டத்துக்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
    Next Story
    ×