என் மலர்
செய்திகள்

பெரியகுளம் பகுதியில் விதிமீறி செல்லும் ஆட்டோ- பள்ளி வாகனங்கள்
பெரியகுளம் பகுதியில் விதி மீறிச்செல்லும் பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களால் விபத்து அபாயம் உள்ளது.
பெரியகுளம்:
பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளான எண்டபுளிபுதுப்பட்டி, தாமரைக்குளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் ஆகியபகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் பெரியகுளம், தேனி பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.
இவர்களை அழைத்துச் செல்ல வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கிராமப்பகுதியில் அதிவேகமாக பொதுமக்களை பயமுறுத்தும் விதமாக சுற்றி வருகின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் ஷேர் ஆட்டோக்களில் அதிகளவு பயணிகளை ஏற்றிக்கொண்டு விதிமீறிச் செல்கின்றனர். இந்த ஆட்டோக்களுக்கு உரிய ஆவணங்கள் உள்ளதா? என்பது கூட தெரியவில்லை. எனவே ஆபத்தை உணராமல் பொதுமக்கள் அவசர தேவைக்காக இவற்றை பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து அதிகாரிகள் இந்த வானங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளான எண்டபுளிபுதுப்பட்டி, தாமரைக்குளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் ஆகியபகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் பெரியகுளம், தேனி பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.
இவர்களை அழைத்துச் செல்ல வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கிராமப்பகுதியில் அதிவேகமாக பொதுமக்களை பயமுறுத்தும் விதமாக சுற்றி வருகின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் ஷேர் ஆட்டோக்களில் அதிகளவு பயணிகளை ஏற்றிக்கொண்டு விதிமீறிச் செல்கின்றனர். இந்த ஆட்டோக்களுக்கு உரிய ஆவணங்கள் உள்ளதா? என்பது கூட தெரியவில்லை. எனவே ஆபத்தை உணராமல் பொதுமக்கள் அவசர தேவைக்காக இவற்றை பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து அதிகாரிகள் இந்த வானங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story






