என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லுக்குறியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர்- உள்பட 40 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்15 Sep 2018 4:19 PM GMT (Updated: 15 Sep 2018 4:19 PM GMT)
வில்லுக்குறியில் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பதவி விலக கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இரணியல்:
இரணியலை அடுத்த வில்லுக்குறி சந்திப்பில் நேற்று குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வங்கி கடன் மோசடியில் சிக்கி உள்ள தொழில் அதிபர் விஜய்மல்லையா வெளிநாடு தப்பிச் செல்ல உதவிய மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பதவி விலக கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திர தேவ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கிறைஸ்ட் ஜெனித் முன்னிலை வகித்தார்.
விஜய், அருள்ராஜ், ஆஸ்கர் பிரடி, வின்ஸ் எல்ஜின், ஜெரால்டு கென்னடி, ஆல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்க வில்லை. அனுமதியின்றி போராட்டம் நடை பெற்றதால் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திர தேவ் உள்பட 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X