search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனியில் அனுமதியின்றி வெட்டப்பட்ட மரக்கட்டைகளுடன் டிராக்டர் பறிமுதல்
    X

    பழனியில் அனுமதியின்றி வெட்டப்பட்ட மரக்கட்டைகளுடன் டிராக்டர் பறிமுதல்

    பழனியில் அனுமதியின்றி வெட்டப்பட்ட 3 டன் எடையுள்ள மரக்கட்டைகளுடன் டிராக்டரை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.
    பழனி:

    பழனி அருகே சிவகிரிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வள்ளி நகர்பகுதியின் தாளமடை ஓடை என்னும் ஓடை உள்ளது. இங்குள்ள மரங்களை சிலர் அனுமதியின்றி வெட்டிக் கடத்துவதாக வருவாய்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து வருவாய்த்துறையினர் நேற்றிரவு இப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது அவ்வழியே வந்த மரக்கட்டைகளை ஏற்றி வந்த டிராக்டரை வழிமறித்து சோதனை நடத்தினர். சோதனையில் எவ்வித அனுமதியின்றி தாளமடை ஓடையில் மரங்களை வெட்டி டிராக்டரில் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சுமார் 3 டன் எடையுள்ள மரக்கட்டைகளுடன் டிராக்டரை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் பழனி தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சப்கலெக்டர் மூலம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×