என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் தூர்வாரும் பணி தொடக்கம்
Byமாலை மலர்5 Sep 2018 7:22 AM GMT (Updated: 5 Sep 2018 7:22 AM GMT)
பருவ மழையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா கால்வாயில் மழை நீர் தங்கு தடையின்றி செல்வதற்காக ரூ. 24 லட்சம் செலவில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983-ல் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது.
அதன்படி ஆந்திர அரசு நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் தண்ணீர் வழங்க வேண்டும்.
இதற்காக கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரம் வரை கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோ மீட்டரும், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டியில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரமும் உள்ளது.
1984-ல் கிருஷ்ணா கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டு 1995-ல் முடிக்கப்பட்டது. 1996-ல் முதல் முதலில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின் வருடத்துக்கு இரண்டு முறை விதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கண்டலேறு அணையில் தற்போது நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் இரண்டாம் தவணையாக அதாவது ஜூலை மாதத்தில் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கவில்லை.
இதனால் தற்போது கிருஷ்ணா நதி கால்வாய் வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால் மழைநீர் தங்கு தடையின்றி பூண்டி ஏரிக்கு சென்றடைய ஏதுவாக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரம் வரை கிருஷ்ணா நதி கால்வாயில் தூர்வார தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ. 24 லட்சம் ஒதுக்கியது.
இந்த நிதியை கொண்டு தூர்வாறும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் பிரதீஷ் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கால்வாய் கரையில் அடர்த்தியாக வளர்ந்த முட்புதர்கள் அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. கால்வாய் தூர் வாரும் பணிகளை 15 நாட்களில் முடிக்க திட்டமிட்டு இருப்பதாக பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் பிரதீஷ் தெரிவித்தார்.
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983-ல் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது.
அதன்படி ஆந்திர அரசு நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் தண்ணீர் வழங்க வேண்டும்.
இதற்காக கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரம் வரை கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோ மீட்டரும், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டியில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரமும் உள்ளது.
1984-ல் கிருஷ்ணா கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டு 1995-ல் முடிக்கப்பட்டது. 1996-ல் முதல் முதலில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின் வருடத்துக்கு இரண்டு முறை விதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கண்டலேறு அணையில் தற்போது நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் இரண்டாம் தவணையாக அதாவது ஜூலை மாதத்தில் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கவில்லை.
இதனால் தற்போது கிருஷ்ணா நதி கால்வாய் வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால் மழைநீர் தங்கு தடையின்றி பூண்டி ஏரிக்கு சென்றடைய ஏதுவாக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரம் வரை கிருஷ்ணா நதி கால்வாயில் தூர்வார தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ. 24 லட்சம் ஒதுக்கியது.
இந்த நிதியை கொண்டு தூர்வாறும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் பிரதீஷ் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கால்வாய் கரையில் அடர்த்தியாக வளர்ந்த முட்புதர்கள் அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது. கால்வாய் தூர் வாரும் பணிகளை 15 நாட்களில் முடிக்க திட்டமிட்டு இருப்பதாக பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் பிரதீஷ் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X