என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
மேலூர் அருகே கால்நடை மருத்துவ அலுவலர் விபத்தில் பலி
By
மாலை மலர்2 Sep 2018 12:13 PM GMT (Updated: 2 Sep 2018 12:13 PM GMT)

மேலூர் அருகே ஸ்கூட்டர் மீது தனியார் பஸ் மோதியதில் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவ அலுவலர் பலியானார்.
மேலூர்:
மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 60), ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவ அலுவலர்.
இவர் இன்று காலை தனது ஸ்கூட்டரில், பெட்ரோல் பங்க் நோக்கிச் சென்றார். மதுரை-திருச்சி 4 வழிச்சாலையில் உள்ள அணுகு சாலையில் ராம மூர்த்தி சென்றார்.
அப்போது மேலூரில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற தனியார் பஸ் அந்த வழியே வந்தது. அந்த பஸ் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில் பஸ்சின் முன் சக்கரத்தில் சிக்கிய ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, ஏட்டு பரசுராமன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சுங்கச்சாவடி வாகன மீட்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வந்த குழுவினர் போக்குவரத்தை சீர்படுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
