என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி முற்றுகை- பொது மக்கள் வாக்குவாதம்
Byமாலை மலர்28 Aug 2018 11:59 AM GMT (Updated: 28 Aug 2018 11:59 AM GMT)
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கே.மோரூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக சில நாட்களுக்கு முன்பு பூமி பூஜை செய்யப்பட்டது.
ஆனால் பூமி பூஜை செய்த இடம் இல்லாமல் தேக்கு மரம், வாகை மரம் உள்ளிட்ட பல விலை உயர்ந்த மரம் உள்ள இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டது. இதற்காக அந்தவிலை உயர்ந்த மரத்தை எல்லாம் பள்ளி நிர்வாகம் வெட்டியது. பின்னர் பள்ளி நிர்வாகம் தேர்வு செய்த வேறு இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான வேலை இன்று நடந்தது.
இது குறித்து அறிந்த ஊர் பொது மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு, மரத்தை வெட்டுவதற்கு சப்-கலெக்டரிடம் அனுமதி வாங்க வேண்டும். புதிய கட்டிடம் கட்டுவதற்கு எ.இ.ஓ-விடம் (வட்டார கல்வி அலுவலர்) அனுமதி வாங்க வேண்டும். நீங்கள் யாரிடம் கேட்டு இந்த இடத்தில் உள்ள விலை உயர்ந்த மரங்களை வெட்டி வேறு இடத்தில் கட்டிடம் கட்டுகின்றீர்கள் என்று தலைமையாசிரியர் சங்கமித்ராவிடம் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். #tamilnews
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கே.மோரூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக சில நாட்களுக்கு முன்பு பூமி பூஜை செய்யப்பட்டது.
ஆனால் பூமி பூஜை செய்த இடம் இல்லாமல் தேக்கு மரம், வாகை மரம் உள்ளிட்ட பல விலை உயர்ந்த மரம் உள்ள இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டது. இதற்காக அந்தவிலை உயர்ந்த மரத்தை எல்லாம் பள்ளி நிர்வாகம் வெட்டியது. பின்னர் பள்ளி நிர்வாகம் தேர்வு செய்த வேறு இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான வேலை இன்று நடந்தது.
இது குறித்து அறிந்த ஊர் பொது மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு, மரத்தை வெட்டுவதற்கு சப்-கலெக்டரிடம் அனுமதி வாங்க வேண்டும். புதிய கட்டிடம் கட்டுவதற்கு எ.இ.ஓ-விடம் (வட்டார கல்வி அலுவலர்) அனுமதி வாங்க வேண்டும். நீங்கள் யாரிடம் கேட்டு இந்த இடத்தில் உள்ள விலை உயர்ந்த மரங்களை வெட்டி வேறு இடத்தில் கட்டிடம் கட்டுகின்றீர்கள் என்று தலைமையாசிரியர் சங்கமித்ராவிடம் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X