search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் - கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்
    X

    ராமநாதபுரம் காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் - கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்

    ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் கேரள மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான உணவுப்பொருட்கள் அனுப்பப்பட்டது.

    ராமநாதபுரம்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவுரையின்படி கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களின் துயரத்தில் பங்கேற்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, நகர் தலைவர் கோபி முன்னிலையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான அரிசி, மைதா, ரவை, கோதுமை போன்ற உணவு பொருட்களும், பல்வேறு வகையான மருத்துவ உபகரண பொருட்களையும் அனுப்பி வைத்தனர்.

    ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் செல்லத்துரை அப்துல்லா, பொருளாளர் அகமது கபீர், கிருஷ்ணராஜ், ஜோதி பாலன், பரமக்குடி நகர் காங்கிரஸ் கமிட்டி அப்துல் அஜீஸ், ஹாஜா நஜிமுதீன், அப்பாஸ் நிர்வாகிகள் சேதுபாண்டி, மணிகண்டன், கருணாகரன், மேகநாதன், ரவி, கார்த்திகைநாதன், கவுசி மகாலிங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயனிடம் நிவாரண பொருட்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாக மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தெரிவித்தார்.

    Next Story
    ×