search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்- அரசுக்கு கோரிக்கை
    X

    தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்- அரசுக்கு கோரிக்கை

    தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    மதுரை:

    தலித் கிறிஸ்தவர் தேசிய பேரவை, தமிழக ஆயர் பேரவை பணிக்குழு, இந்திய திருச்சபைகளின் தேசிய பேரவை, தலித் தரிசன வாரியம் இணைந்து தலித் கிறிஸ்தவர் அரசியல் எழுச்சி மாநாட்டை நடத்தின.

    திருச்சியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தலித் கிறிஸ்தவர் தேசிய பேரவை தமிழக தலைவரும், மாநாட்டுத் தலைவருமான மேரிஜான், தேசிய ஆலோசகர் சார்லஸ், தமிழக ஆயர் பேரவை எஸ்.சி., எஸ்.டி. பணிக் குழுத்தலைவர் தாமஸ் பால்சாமி, செயலாளர் குழந்தைநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரைப்படி தலித் கிறிஸ்தவர்களையும், தலித் இஸ்லாமியர்களையும் மத்திய அரசு தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

    ஆதி திராவிட கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

    தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிமைகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்காத அரசியல் கட்சிகளை தேர்தலில் புறக்கணிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. #tamilnews
    Next Story
    ×