என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கந்தர்வக்கோட்டையை கலக்கிய கொள்ளையன் கைது
Byமாலை மலர்20 Aug 2018 11:03 AM GMT (Updated: 20 Aug 2018 11:03 AM GMT)
கந்தர்வக்கோட்டையை கலக்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை மங்களா கோவில், விராலிப்பட்டி ஆகிய பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். போலீசிலும் புகார்கள் குவிந்தன. இதையடுத்து புதுக்கோட்டை எஸ்.பி. செல்வராஜ், டி.எஸ்.பி. ஆறுமுகம் ஆகியோர் உத்தரவின் பேரில் கந்தர்வக்கோட்டை இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கந்தர்வக்கோட்டை பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 15 பவுன் நகையை மீட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X