search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்தர்வக்கோட்டையை கலக்கிய கொள்ளையன் கைது
    X

    கந்தர்வக்கோட்டையை கலக்கிய கொள்ளையன் கைது

    கந்தர்வக்கோட்டையை கலக்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை மங்களா கோவில், விராலிப்பட்டி ஆகிய பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். போலீசிலும் புகார்கள் குவிந்தன. இதையடுத்து புதுக்கோட்டை எஸ்.பி. செல்வராஜ், டி.எஸ்.பி. ஆறுமுகம் ஆகியோர் உத்தரவின் பேரில் கந்தர்வக்கோட்டை இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கந்தர்வக்கோட்டை பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 15 பவுன் நகையை மீட்டனர்.

    Next Story
    ×