search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே ஊராட்சி அலுவலக உதவியாளர் கொலையில் 11 பேர் கைது
    X

    சேலம் அருகே ஊராட்சி அலுவலக உதவியாளர் கொலையில் 11 பேர் கைது

    ஊராட்சி அலுவலக உதவியாளர் கொலையில் 11 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
    ஆட்டையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கலைஞர் காலனியை சேர்ந்தவர் சம்பத் (வயது 45). இவர் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பத் நேற்று முன்தினம் சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி அருகே கரடு பகுதியில் பிணமாக கிடந்தார். 

    இது குறித்து தகவல் அறிந்து ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இறந்த சம்பத் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்தது. 

    இதில் ஆத்திரம் அடைந்த மாணவியின் சகோதரர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து சம்பத்தை அடித்து கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீசார் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.  இதில் மாணவியின் சகோதரர் ராஜ் என்ற ராஜ்குமார் (23), உறவினர்கள் நவீன் என்ற நவீன்குமார் (24), பாரதி என்ற மோகன் ராஜ் (22), ஆனந்த் என்ற ஆனந்த்ராஜ் (23), கார்த்திக் என்ற கார்த்திக் ராஜ் (24), சின்னான் என்ற தினேஷ் (22), நந்து என்ற நந்தகுமார் (24), தீபக் (28), சக்திவேல் (23), குமரவேல் (31), குட்டி என்ற முத்துக்குமார் (28) ஆகிய 11 பேரை கைது செய்தனர். 

    தலைமறைவான மற்றொரு நவீன் என்பவரை தேடி வருகின்றனர். 
    Next Story
    ×