search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்- திமுக தலைமைக்கழகம் வேண்டுகோள்
    X

    கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்- திமுக தலைமைக்கழகம் வேண்டுகோள்

    இறுதி ஊர்வலத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதி காத்து கருணாநிதிக்கு இறுதி வணக்கம் செலுத்தும்படி திமுக தலைமைக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. #DMK #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும், அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

    இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-



    திமுக  தலைவரும் தமிழின தலைவருமான கலைஞரின் புகழுடன் தாங்கிய இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணியளவில் ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு, சிவானந்தா சாலை வழியாக தந்தை பெரியார் சிலையைக் கடந்து, பேரறிஞர் அண்ணா சிலை வந்தடைந்து, அங்கிருந்து வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

    கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் இறுதி ஊர்வலத்தில் அமைதி காத்து, தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞருக்கு இறுதி வணக்கம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. #DMK #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral 
    Next Story
    ×