என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
நெட்டப்பாக்கம் அருகே தனியார் நிறுவனத்தில் காப்பர் கம்பி திருடிய மேலும் 2 சிறுவர்கள் கைது
Byமாலை மலர்7 Aug 2018 8:55 AM GMT (Updated: 7 Aug 2018 8:55 AM GMT)
நெட்டப்பாக்கம் அருகே தனியார் நிறுவனத்தில் காப்பர் கம்பி திருடிய மேலும் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெட்டப்பாக்கம் அருகே ஏரிபாக்கம்- நத்தமேடு சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் ஏரிப்பாக்கம் பழைய காலனியை சேர்ந்த புகழ் (வயது 19) என்பதும், இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காப்பர் கம்பிகளை திருடி சாக்கு மூட்டையில் எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள அந்த காப்பர் கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகழை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் புகழுடன் சேர்ந்து மேலும் 2 சிறுவர்கள் இந்த காப்பர் கம்பி திருட்டில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த அந்த 2 சிறுவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெட்டப்பாக்கம் அருகே ஏரிபாக்கம்- நத்தமேடு சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் ஏரிப்பாக்கம் பழைய காலனியை சேர்ந்த புகழ் (வயது 19) என்பதும், இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காப்பர் கம்பிகளை திருடி சாக்கு மூட்டையில் எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள அந்த காப்பர் கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகழை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் புகழுடன் சேர்ந்து மேலும் 2 சிறுவர்கள் இந்த காப்பர் கம்பி திருட்டில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த அந்த 2 சிறுவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X