search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன் கடைகள் நாளை வழக்கம்போல் செயல்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
    X

    ரேஷன் கடைகள் நாளை வழக்கம்போல் செயல்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

    தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #RationShopEmployees #SellurRaju
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

    தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும்.  அனைத்து பொருள்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். #RationShopEmployees #SellurRaju
    Next Story
    ×