என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
Byமாலை மலர்4 Aug 2018 4:47 PM GMT (Updated: 4 Aug 2018 4:47 PM GMT)
வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #RationShopEmployees #SellurRaju
சென்னை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாநில அரசு அதிக ஊதியம் வழங்கி வருகிறது. மலைப் பகுதியில் பணிபுரியும் ரேஷன் ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் தரப்படுகிறது. ரேஷன் கடை ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசு நல்ல முடிவு எடுக்கும்.
வாரிசு அரசியலை, ஊழலை ஒழிக்கும் கட்சி அதிமுக மட்டும்தான். எப்போதும், எந்த நேரத்திலும் எந்த தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ள கட்சி அதிமுக என தெரிவித்துள்ளார். #RationShopEmployees #SellurRaju
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X