search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
    X

    ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

    வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #RationShopEmployees #SellurRaju
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாநில அரசு அதிக ஊதியம் வழங்கி வருகிறது. மலைப் பகுதியில் பணிபுரியும் ரேஷன் ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் தரப்படுகிறது. ரேஷன் கடை ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசு நல்ல முடிவு எடுக்கும்.

    வாரிசு அரசியலை, ஊழலை ஒழிக்கும் கட்சி அதிமுக மட்டும்தான். எப்போதும், எந்த நேரத்திலும் எந்த தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ள கட்சி அதிமுக என தெரிவித்துள்ளார். #RationShopEmployees #SellurRaju
    Next Story
    ×