என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு விரைவில் குடிநீர் அனுப்பப்படும்- அதிகாரி தகவல்
Byமாலை மலர்3 Aug 2018 7:13 AM GMT
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #VeeranamLake
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது மாவட்டத்தின் முதன்மையான நீர் ஆதாரமாக விளங்குவதோடு சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 மாதங்களாக நீர் வரத்து இல்லாமல் வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. பின்னர் கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணைக்கு திறக்கப்பட்டது. அங்கிருந்து வடவாறு வழியாக கடந்த 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 2,200 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. இன்றும் அதே கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
ஏரியின் நீர்மட்டம் நேற்று 42.45 அடியாக இருந்தது. இன்று அது 43.35 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நீரேற்று நிலையத்தை சென்னை மெட்ரோ வாட்டர் செயல் இயக்குனர் பிரபுசங்கர், கண்காணிப்பு பொறியாளர் திருநாவுக்கரசு, உதவி பொறியாளர்கள் அருண்குமார், விஷ்வநாதன் உள்ளிட்ட குழுவினர் நேற்று பார்வையிட்டனர். பின்னர் வீராணம் ஏரியின் நீர்வாங்கி நெடுமாடத்தை ஆய்வு செய்தனர். முன்னதாக சோதனை முறையில் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீரை பப்பிங் செய்து பார்த்தனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, சென்னைக்கு குடிநீர் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேத்தியாதோப்பு முதல் வடக்குத்து பகுதி வரை உள்ள குடிநீர் குழாயை சுத்தம் செய்யும் பணி வீராணம் ஏரி நீரேற்று நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி 4 நாட்கள் வரை நடைபெறும். அதன் பின்னர் விரைவில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படும் என்றார். #VeeranamLake
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது மாவட்டத்தின் முதன்மையான நீர் ஆதாரமாக விளங்குவதோடு சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 மாதங்களாக நீர் வரத்து இல்லாமல் வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. பின்னர் கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணைக்கு திறக்கப்பட்டது. அங்கிருந்து வடவாறு வழியாக கடந்த 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 2,200 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. இன்றும் அதே கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
ஏரியின் நீர்மட்டம் நேற்று 42.45 அடியாக இருந்தது. இன்று அது 43.35 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீராணம் ஏரியின் கடைசி பகுதியான சேத்தியாத் தோப்பு அருகே பூதங்குடியில் நீரேற்று நிலையம் உள்ளது. இங்கு காவிரி தண்ணீர் வந்தது. இங்கிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, சென்னைக்கு குடிநீர் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேத்தியாதோப்பு முதல் வடக்குத்து பகுதி வரை உள்ள குடிநீர் குழாயை சுத்தம் செய்யும் பணி வீராணம் ஏரி நீரேற்று நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி 4 நாட்கள் வரை நடைபெறும். அதன் பின்னர் விரைவில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படும் என்றார். #VeeranamLake
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X