என் மலர்

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட மாணிக்கம், கைது செய்யப்பட்ட சிவா.
    X
    கொலை செய்யப்பட்ட மாணிக்கம், கைது செய்யப்பட்ட சிவா.

    காவேரிப்பட்டணத்தில் தொழிலாளி கொலை- கைதான நண்பர் சேலம் சிறையில் அடைப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக கைதான நண்பர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜீவா நகரை சேர்ந்த பழனியின் மகன் மாணிக்கம் (வயது 22). நேற்று முன்தினம் இரவு இவர் காவேரிப்பட்டணத்தில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் பீர் பாட்டிலால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயசங்கர், காயத்திரி ஆகியோர் வழக்கு பதிவு செய்து அவரை கொலை செய்த அவரது நண்பரான சிவா (22) என்பவரை கைது செய்தனர். காவேரிப்பட்டணத்தை அடுத்த கருக்கன்சாவடி பகுதியில் உள்ள முருகன் கோவில் அருகே நின்றிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    நண்பரை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து சிவா பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தன்னை கரடி என்று மாணிக்கம் கிண்டல் செய்ததால் அவரை கொன்றதாக அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
    Next Story
    ×