search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாராபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்- அமைச்சர் ஆய்வு
    X

    தாராபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்- அமைச்சர் ஆய்வு

    தாராபுரத்தில் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் பழனிசாமி முன்னிலை வகித்தார். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 16 ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித்திட்டம், ஒன்றிய பொது நிதி, முதல்-அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள், தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டும் திட்டம், கனிம மற்றும் சுரங்கப்பணிகள், 14-வது நிதிக்குழு மானிய பணிகள், நபார்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மற்றும் பிற துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அமைச்சர் ஊராட்சி வாரியாக விரிவாக ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மூலனூர் ஊராட்சிக்குட்பட்ட 12 ஊராட்சிப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஈரோடு எம்.பி., எஸ்.செல்வக்குமார சின்னையன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், உதவி இயக்குநர்கள் பாலசுப்பிரமணியன் (ஊராட்சிகள்), முருகேசன் (தணிக்கை), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராகவேந்திரன் (தாராபுரம்), அய்யாச்சாமி (மூலனூர்), மாணிக்கம் (மூலனூர்), அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வேளாண்மை துறை அலுவலர் ஞானசேகர், தாசில்தார் சிவக்குமார், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் ,மற்றும் அ.தி.மு.க. நகர செயலாளர் காமராஜ் ஒன்றிய செயலாளர் சின்னப்பன் என்கிற பழனிசாமி முன்னாள் யூனியன் சேர்மன்கள் ரமேஷ் ,செந்தில்குமார் மாவட்ட மகளிர்அணி செயலாளர் ரேவதி குமார் மேலும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்கள்.

    Next Story
    ×