search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவளக்குப்பம் அருகே சைக்கிள் மீது கார் மோதியதில் தனியார் நிறுவன காவலாளி பலி
    X

    தவளக்குப்பம் அருகே சைக்கிள் மீது கார் மோதியதில் தனியார் நிறுவன காவலாளி பலி

    தவளக்குப்பம் அருகே சைக்கிள் மீது கார் மோதியதில் தனியார் நிறுவன காவலாளி பலியானார்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே கொருக்குமேடு காந்திநகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது74). இவர் தவளக்குப்பம்- புதுவை மெயின்ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார்.

    நேற்று மதியம் இவர் மற்றொரு கம்பெனியில் காவலாளியாக வேலைபார்த்து வரும் நண்பரை பார்க்க சைக்கிளில் சென்றார்.

    சாலையை கடக்க முயன்ற போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த பிரான்சிசை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரான்சிஸ் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மகன் அந்தோணி கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேட்ரிக் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×