என் மலர்
செய்திகள்

ஆம்பூர் அருகே சிறுத்தைபுலிகள் நடமாட்டம் உள்ளதா? - வனத்துறை கண்காணிப்பு
ஆம்பூர் அருகே இரவு நேரத்தில் சிறுத்தை உறுமல் சத்தம், கால்நடைகள் அலறல் சத்தம் கேட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆம்பூர்:
ஆம்பூர் வனச்சரக பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. மாச்சம்பட்டு, பெங்களமூலை ஆகிய இடங்களில் சிறுத்தை இருப்பதை அப்பகுதியினர் பார்த்துள்ளனர்.
தற்போது ஆம்பூர் அருகே கதவாளம் கிராமத்தில் கருங்கல்குட்டை பகுதி பாட்டைசாரதி அம்மன் கோவிலில் இன்று 2-வது ஆடி வெள்ளிக்கிழமை யொட்டி பூஜை ஏற்பாடு செய்ய நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் சென்றுள்ளனர். அப்போது ஒரே நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக 3 சிறுத்தைகள் செல்வதை பார்த்தகாக அவர்கள் ஊருக்குள் வந்து தெரிவித்தனர்.
இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். பின் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
இதுகுறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலர் கவிதாவிடம் கேட்ட போது, சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததின் பேரில் வனத்துறையினர் அங்கு சென்றுள்ளனர்.
மேலும் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் எனவும், சிறுத்தை உறுமல் சத்தம், கால்நடைகள் அலறல் சத்தம் கேட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
ஆம்பூர் வனச்சரக பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. மாச்சம்பட்டு, பெங்களமூலை ஆகிய இடங்களில் சிறுத்தை இருப்பதை அப்பகுதியினர் பார்த்துள்ளனர்.
தற்போது ஆம்பூர் அருகே கதவாளம் கிராமத்தில் கருங்கல்குட்டை பகுதி பாட்டைசாரதி அம்மன் கோவிலில் இன்று 2-வது ஆடி வெள்ளிக்கிழமை யொட்டி பூஜை ஏற்பாடு செய்ய நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் சென்றுள்ளனர். அப்போது ஒரே நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக 3 சிறுத்தைகள் செல்வதை பார்த்தகாக அவர்கள் ஊருக்குள் வந்து தெரிவித்தனர்.
இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். பின் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
இதுகுறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலர் கவிதாவிடம் கேட்ட போது, சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததின் பேரில் வனத்துறையினர் அங்கு சென்றுள்ளனர்.
மேலும் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாம் எனவும், சிறுத்தை உறுமல் சத்தம், கால்நடைகள் அலறல் சத்தம் கேட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
Next Story






