search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூர் அருகே ஐம்பொன் சிலை கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது
    X

    ஆம்பூர் அருகே ஐம்பொன் சிலை கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது

    ஆம்பூர் அருகே ஐம்பொன் சிலை கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் பூமாலை மலை மீது உள்ள முருகர் கோவிலில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு ரூ.5 கோடி மதிப்பிலான முருகர், வள்ளி, தெய்வானை ஆகிய 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்த 3 சிலைகளையும் கடந்த மாதம் 6-ந் தேதி பேரணாம்பட்டு அரவட்லா மலை பகுதியில் ஒரு கடத்தல் கும்பல் விற்பனை செய்ய முயன்றது.

    ரகசிய தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், 3 ஐம்பொன் சிலைகளையும் மீட்டு சிலை கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

    இந்த சிலை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பேரணாம்பட்டு சாத்கர் பகுதியை சேர்ந்த சிராஜ் (வயது 43) போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில், ஆம்பூர் தாலுகா போலீசார் தலைமறைவாக இருந்த சிராஜை நேற்றிரவு கைது செய்தனர். வேறு ஏதாவது கோவில் சிலை கடத்தலிலும் தொடர்புள்ளதா? என்பது குறித்தும் சிராஜிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×