search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கயத்தாறில் திமுக தெருமுனை பிரசாரம்
    X

    கயத்தாறில் திமுக தெருமுனை பிரசாரம்

    கயத்தாறில் திமுக தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க.கிழக்கு ஒன்றியம், இளைஞரணி சார்பில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரசாரகூட்டம் ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் தலைமையில் கயத்தாறில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கருப்பசாமிபாண்டியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காளிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு வருகைபுரிந்த அனைவரையும் கயத்தாறு பேரூர் இளைஞரணி அமைப்பாளர் அருண்பாண்டியன் வரவேற்றார்.

    கூட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கருப்பசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் மோகன், மாவட்ட தொண்டரணி துணைஅமைப்பாளர்கள் செல்வகுமார். சுரேஷ்கண்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் பஹீர், நகர துணை செயலாளர் குருசாமிப்பாண்டியன், பேரூர் செயலாளர்கள் கிருஷ்ணகுமார், ராகவன், மாவட்ட பிரதிநிதி கொம்பையா, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அய்யாத்துரை,

    மாவட்ட பிரதிநிதி, பவுன்ராஜ், எட்டுராஜ், ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சந்தனமாரியம்மாள், ஒன்றிய வக்கீல் பிரிவு துணை அமைப்பாளர் மாரியப்பன் மற்றும் ஒன்றிய ,நகர நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய, நகர இளைஞரணியினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×