search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேளம்பாக்கத்தில் லாரி மோதி சிறுவன் பலி
    X

    கேளம்பாக்கத்தில் லாரி மோதி சிறுவன் பலி

    கேளம்பாக்கத்தில் லாரி மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    திருப்போரூர்:

    கேளம்பாக்கம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவி. தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பத்மினி. இவர்களது 4-வது மகன் செவன் ரித்விக். அங்குள்ள மழலையர் பள்ளியில் படித்து வந்தான். மகனை பள்ளியில் விடுவதற்காக் பத்மினி மற்றும் அவரது தந்தை தியாகராஜன் ஆகியோர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.

    வீடு அருகே உள்ள சிக்னலில் திரும்புவதற்காக நின்றபோது பின்னால் வந்த மண் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சிறுவன் ரித்விக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×