search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி - ஈரோடு விசைத்தறி உற்பத்தி இன்று முதல் நிறுத்தம்
    X

    லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி - ஈரோடு விசைத்தறி உற்பத்தி இன்று முதல் நிறுத்தம்

    லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலியால் ஈரோடு மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் இன்று(புதன்கிழமை)முதல் தங்களது உற்பத்தியை நிறுத்தி உள்ளனர். #LorryStrike

    ஈரோடு:

    லாரி உரிமையாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20-ந் தேதி முதல் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாவட்டத்திலும் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் பல கோடி மதிப்பிலான வர்த்தகம் முடங்கியுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் பிரதான தொழிலாக ஜவுளித் தொழில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து மேற்கு வங்காளம் கொல்கத்தா, ராஜஸ்தான் மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் ஜவுளி துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக பலகோடி மதிப்பிலான ஜவுளிகள் குடோன்களில் தேக்கம் அடைந்து வருகின்றன.

    இதனை அடுத்து ஈரோடு மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் இன்று(புதன்கிழமை) முதல் தங்களது உற்பத்தியை நிறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் கூறியதாவது,-

    ஈரோட்டில் மாணிக்கம்பாளையம் வீரப்பன்சத்திரம், நாராயண வலசு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்ப்பட்டு வருகின்றன.

    இங்கு தினமும் ரூ.6 கோடி மதிப்பில் 20 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து நாட்களாக ரூ. 35 கோடி மதிப்பிலான துணிகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. எனவே லாரிகள் வேலை நிறுத்தம் முடியும்வரை விசைத்தறி உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.

    இவர் அவர்கள் கூறினர்.

    தமிழக அரசின் இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து தான் அதிகளவில் வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #LorryStrike

    Next Story
    ×