search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதிய உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை அரசு கைவிட வேண்டும்: மார்க். கம்யூ. வலியுறுத்தல்
    X

    மதிய உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை அரசு கைவிட வேண்டும்: மார்க். கம்யூ. வலியுறுத்தல்

    அரசு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை காங்கிரஸ் அரசு. மக்கள் நல திட்டங்களை வெட்டி சுருக்குவது, தனியார் மயத்தை ஊக்குவிப்பது, மின் கட்டணம், தண்ணீர் வரி, வீட்டு வரி போன்ற சேவைக்கட்டணங்களை பெருமடங்கு உயர்த்தி மக்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றுவதுஎன்பதையே தன் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை இஸ்கான் என்ற மத அடிப்படையிலான அமைப்பின் கீழ் இயங்கிவரும் அட்சய பாத்திரா அறக்கட்டளை என்ற தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முடிவை மேற்கொண்டுள்ளது.

    மதச்சார்ப்பற்ற அரசியல் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் அரசின் தற்கொலைக்கு ஒப்பான இத்தகைய செயலை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள மதிய உணவுத்திட்டத்தில் என்ன குறைபாடு இருக்கிறது என்பதற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது?

    இந்த ஒப்பந்தம் குறித்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாண்மைகுழு, ஆசிரியர்கள், பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள்,ஊட்டச்சத்து நிபுணர்கள், தற்போது இப்பணியை செய்துவரும் ஊழியர்களிடம்கருத்து எதையும் கேட்காமல், அடிப்படையான ஆய்வு எதையும் மேற்கொள்ளாமல் செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

    இது அப்பட்டமான நமது உணவு பாரம்பரியத்தின் மீதும், உணவுஉரிமை மீதும் தொடுக்கப்பட்டுள்ள கொடூரமான தாக்குதலாகும். உடனடியாக தனியாரிடம் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மதிய உணவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுகொள்கிறது.

    இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×