search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மறியல்: 25 பெண்கள் உள்பட 155 பேர் கைது
    X

    ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மறியல்: 25 பெண்கள் உள்பட 155 பேர் கைது

    26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருதுநகர்:

    ஊராட்சி செயலர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    மாவட்ட தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 25 பெண்கள் உள்பட 155 பேர் கைது செய்யப்பட்டனர். 
    Next Story
    ×