என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாங்காய்களுக்கு திடீர் தடை - தமிழக விவசாயிகளுடன் சித்தூர் கலெக்டர் பேச்சுவார்த்தை
    X

    மாங்காய்களுக்கு திடீர் தடை - தமிழக விவசாயிகளுடன் சித்தூர் கலெக்டர் பேச்சுவார்த்தை

    தமிழக மாங்காய்களுக்கு திடீர் தடை தொடர்பாக சித்தூர் கலெக்டருடன் தமிழக மா விவசாயிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். #TamilNaduMangoban

    குடியாத்தம்:

    தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திராவில் மவுசு அதிகம். இங்குள்ள மாம்பழங்களில் அதிக சாறு கிடைப்பதால் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஜூஸ் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழக மாம்பழங்களை அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன.

    இதனால் ஆந்திர மாம்பழங்கள் விலை வீழ்ச்சியை சந்தித்தது. இப்பிரச்சினை தொடர்பாக, ஆந்திர மாநில விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தமிழக மாம்பழங்கள், மாங்காய்களுக்கு சித்தூர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

    தமிழகத்தில் இருந்து மாம்பழங்கள், மாங்காய்கள் ஏற்றிச்சென்ற 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வேலூர் காட்பாடியை அடுத்த சித்தூர் எல்லையான பரதராமி உள்ளிட்ட பகுதிகளிலேயே ஆந்திர போலீசாரால் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டன.

    தடையை மீறி கொண்டு செல்லப்பட்ட மாம்பழங்கள், மாங்காய்களை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் தமிழக மாம்பழ விவசாயிகள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். தடையை நீக்க வலியுறுத்தி பரதராமி சோதனை சாவடியில் தமிழக விவசாயிகள் மாங்காய்களை தரையில் கொட்டி போராட்டம் செய்தனர்.

    இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கிடைக்காவிட்டால், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் தக்காளி உள்ளிட்ட காய்கறி வாகனங்கள், பால் கொண்டு வரும் லாரிகளையும் மறித்து தடை செய்யும் போராட்டம் செய்வோம் என்று தமிழக மாங்காய் விவசாயிகள் எச்சரித்தனர்.

    இதைத்தொடர்ந்து, தமிழக மாங்காய் விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த சித்தூர் மாவட்ட கலெக்டர் பிரதியும்ணா அழைப்பு விடுத்துள்ளார். சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது.

    இருமாநில அதிகாரிகள் மற்றும் இருமாநில மாங்காய் விவசாயிகள் கலந்து கொண்டு விவாதிக்கின்றனர். பேச்சுவார்த்தையின் போது, தமிழக மாங்காய்களுக்கு ஆந்திராவுக்குள் கொண்டுச் செல்ல ஒரு மாதம் அனுமதிக்க வேண்டும். இந்தாண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் மாங்காய்களுக்கு தடை விதித்துள்ளதால், தமிழக மா விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல கோடி மதிப்பிலான பலநூறு டன் மாங்காய்கள் தேங்கி கிடந்து அழுகி வருவதை எடுத்து கூற உள்ளதாகவும் வேலூர் மாவட்ட மா உற்பத்தியாளர் சங்க தலைவர் வெங்கடேஷ் கூறினார். #TamilNaduMangoban

    Next Story
    ×