search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தந்தை சமாதி அருகே டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    தந்தை சமாதி அருகே டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

    திருச்சி அருகே கடன் தொல்லையால் தந்தை சமாதி அருகே டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தா.பேட்டை:

    திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஜம்புநாதபுரம் வாழவந்திகிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 58), ஹோமியோபதி டாக்டர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.குழந்தைகள் கிடையாது.

    இதனிடையே சம்பத் பலரிடம் கடன் வாங்கியிருந்தார். நீண்ட நாட்களாகியும் அவரால் கடனை அடைக்க முடியவில்லை. இதன் காரணமாகவும், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாலும் கடந்த சில நாட்களாக மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்தநிலையில் இன்று காலை சம்பத் , ஜம்புநாதபுரம் சுடுகாட்டில் அவரது தந்தை சமாதி அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இது குறித்த தகவல் அறிந்ததும் ஜம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடன் தொல்லை காரணமாக சம்பத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. வேறு ஏதேனும் காரணமா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×