search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே ‘ஆம்லெட்’ தகராறில் போலீஸ்காரர் மண்டை உடைப்பு
    X

    திருமங்கலம் அருகே ‘ஆம்லெட்’ தகராறில் போலீஸ்காரர் மண்டை உடைப்பு

    ஓட்டலில் ‘ஆம்லெட்’ கேட்ட விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் தாக்கப்பட்டார்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் மாரியப்பன் (வயது 30). இவர் காடுபட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று மாரியப்பன், கூடக்கோவில் அருகே உள்ள கல்லனை பகுதி ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார். அங்கு அவரது ஊர்க்காரர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும், கடை உரிமையாளர் நெடுங்குளம் பாலனுக்கும் ‘ஆம்லெட்’ தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த சம்பவத்தில் மாரியப்பன் தலையிட்டு, ஓட்டல் உரிமையாளர் பாலனை தாக்கினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த பாலன், அவரது உறவினரான தொழில் அதிபர் முருகன் (43), அவரது மகன்கள் பெருமாள் (24), சதீஷ் (22) ஆகியோர் சேர்ந்து போலீஸ்காரர் மாரியப்பனை கம்பியால் தாக்கினர்.

    இதில் தலை மற்றும் கால் மூட்டில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி முருகன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் பெருமாள் மற்றும் சதீஷ் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×