என் மலர்
செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே மயில்களை வேட்டையாடிய தொழிலதிபர் கைது
ஒட்டன்சத்திரம் அருகே உடல் வீரியத்துக்காக மயில்களை வேட்டையாடிய தொழிலதிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் முயல், மான், மயில் போன்றவை தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வந்தன. குறிப்பாக இது போன்ற வன விலங்குகளை உடல் மினுமினுப்புக்காகவும், வீரியத்துக்காகவும் வேட்டையாடி வனப்பகுதியிலேயே சிலர் சமைத்து சாப்பிடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி சின்னக்காம்பட்டி பகுதியில் நேற்று வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் தீ மூட்டி இறைச்சி சமைத்து 2 பேர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தது தெரிய வந்தது.
வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 60) என்பதும் பாபு (55) என்பதும் தெரிய வந்தது. பழனிச்சாமி ஒட்டன்சத்திரத்தில் பைனான்ஸ் தொழில் நடத்தி வரும் தொழிலதிபர் ஆவார். பாபு என்பவரை வேட்டைக்காக அவர் அழைத்து வந்து மயிலை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டது தெரிய வந்தது.
அவர்கள் இருவரையும் பிடித்து வேடடைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி மற்றும் மயில் இறைச்சியையும் கைப்பற்றி ஒட்டன்சத்திரம் கோர்ட்டில் ஒப்படைத்தனர். #tamilnews
ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் முயல், மான், மயில் போன்றவை தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வந்தன. குறிப்பாக இது போன்ற வன விலங்குகளை உடல் மினுமினுப்புக்காகவும், வீரியத்துக்காகவும் வேட்டையாடி வனப்பகுதியிலேயே சிலர் சமைத்து சாப்பிடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி சின்னக்காம்பட்டி பகுதியில் நேற்று வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் தீ மூட்டி இறைச்சி சமைத்து 2 பேர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தது தெரிய வந்தது.
வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 60) என்பதும் பாபு (55) என்பதும் தெரிய வந்தது. பழனிச்சாமி ஒட்டன்சத்திரத்தில் பைனான்ஸ் தொழில் நடத்தி வரும் தொழிலதிபர் ஆவார். பாபு என்பவரை வேட்டைக்காக அவர் அழைத்து வந்து மயிலை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டது தெரிய வந்தது.
அவர்கள் இருவரையும் பிடித்து வேடடைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி மற்றும் மயில் இறைச்சியையும் கைப்பற்றி ஒட்டன்சத்திரம் கோர்ட்டில் ஒப்படைத்தனர். #tamilnews
Next Story






