search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் அருகே திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் வி‌ஷம் குடித்தார்
    X

    விழுப்புரம் அருகே திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் வி‌ஷம் குடித்தார்

    கணவருடன் ஏற்பட்ட தகராறில் புதுப்பெண் வி‌ஷம் குடித்தார். அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் அருகே உள்ள அதனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது30).இவருக்கும் சென்னை கோவினம்பாக்கத்தை சேர்ந்த தண்டபாணி மகள்புஷ்பா (27) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த புஷ்பா வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்தார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆஸ்பத்திரிக்கு கெடார் போலீசார் சென்று சிகிச்சை பெற்று வரும் புஷ்பாவிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது புஷ்பா கூறியதாவது-

    எனது கணவர் என்னை ஆபாசமாக பேசி அடித்து உதைத்து வந்தார். மேலும் மாமியார் பானுமதி பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கிவரும்படி சித்ரவதை செய்தார் என கூறியுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×