search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனந்தராமன்
    X
    அனந்தராமன்

    அரசுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் கவர்னர் கிரண்பேடி மீது வழக்கு - புதுவை அரசு கொறடா

    உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று அரசுக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் கவர்னர் கிரண்பேடி மீது வழக்கு தொடர்வோம் என்று புதுவை அரசு கொறடா அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    டெல்லி மாநில அரசில் கவர்னருக்கு உள்ள அதிகாரம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு கூறியது.

    அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் எல்லா அதிகாரங்களும் உள்ளது. அமைச்சரவையின் முடிவுக்கு ஏற்ப கவர்னர் செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக புதுவை அரசு கொறடா அனந்தராமன் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-

    டெல்லி மாநில அரசு தொடர்பான வழக்கில் கவர்னருக்கு உள்ள அதிகாரம் பற்றி சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம்.


    டெல்லியில் உள்ள அதே பிரச்சனைதான் புதுவை மாநிலத்திலும் நிலவியது. இங்கு கவர்னர் கிரண்பேடி அதிகாரத்தை தனது கையில் எடுத்து செயல்பட்டார். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசை மதிக்கவில்லை.

    இனியாவது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று அவர் நடந்து கொள்ள வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் என்று கோர்ட்டு உறுதிபட கூறி உள்ளது.

    இந்த தீர்ப்பை பின்பற்றி கவர்னர் கிரண்பேடி தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். அரசுக்கு உரிய ஒத்துழைப்பு தர வேண்டும். அவ்வாறு செயல்படவில்லை என்றால் கவர்னர் கிரண்பேடி மீது நாங்களும் வழக்கு தொடருவோம்.

    இவ்வாறு அனந்தராமன் கூறினார். #DelhiPowerTussle
    Next Story
    ×