search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே 10-ம் வகுப்பு மாணவர் விபத்தில் பலி
    X

    திருமங்கலம் அருகே 10-ம் வகுப்பு மாணவர் விபத்தில் பலி

    திருமங்கலம் அருகே லாரி மீது மொபட் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள மைக்குடியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 15). இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ராமச்சந்திரன் தனது உறவினர் மகன் ரித்தீசுடன் (5) சின்ன உலகாணியில் உள்ள உறவினர் வீட்டுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    நெடுங்குளம் விலக்கில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி திடீரென நின்றது. இதனால் ராமச்சந்திரன் சென்ற மொபட் எதிர்பாராத விதமாக லாரியின் பின் பக்கத்தில் மோதியது.

    இந்த விபத்தில் ராமச்சந்திரனும், ரித்தீசும் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை அப்பகுதியினர் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே ராமச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். ரித்தீசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவர் முருகனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
    Next Story
    ×