என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே 10-ம் வகுப்பு மாணவர் விபத்தில் பலி
Byமாலை மலர்2 July 2018 10:39 AM GMT (Updated: 2 July 2018 10:39 AM GMT)
திருமங்கலம் அருகே லாரி மீது மொபட் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள மைக்குடியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 15). இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ராமச்சந்திரன் தனது உறவினர் மகன் ரித்தீசுடன் (5) சின்ன உலகாணியில் உள்ள உறவினர் வீட்டுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
நெடுங்குளம் விலக்கில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி திடீரென நின்றது. இதனால் ராமச்சந்திரன் சென்ற மொபட் எதிர்பாராத விதமாக லாரியின் பின் பக்கத்தில் மோதியது.
இந்த விபத்தில் ராமச்சந்திரனும், ரித்தீசும் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை அப்பகுதியினர் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே ராமச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். ரித்தீசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவர் முருகனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
திருமங்கலம் அருகே உள்ள மைக்குடியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 15). இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ராமச்சந்திரன் தனது உறவினர் மகன் ரித்தீசுடன் (5) சின்ன உலகாணியில் உள்ள உறவினர் வீட்டுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
நெடுங்குளம் விலக்கில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி திடீரென நின்றது. இதனால் ராமச்சந்திரன் சென்ற மொபட் எதிர்பாராத விதமாக லாரியின் பின் பக்கத்தில் மோதியது.
இந்த விபத்தில் ராமச்சந்திரனும், ரித்தீசும் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை அப்பகுதியினர் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே ராமச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். ரித்தீசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவர் முருகனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X