search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாமீனில் வெளிவந்த ரவுடி பினு தலைமறைவு
    X

    ஜாமீனில் வெளிவந்த ரவுடி பினு தலைமறைவு

    பல்வேறு குற்றவழக்குகளில் சரணடைந்த ரவுடி பினு, ஜாமீனில் வெளிவந்த பின்னர் தலைமறைவானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #RowdiBinu #Abscond
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வலம்வந்த பிரபல ரவுடி பினு கடந்த சில வருடங்களாக தலைமறைவாக இருந்துவந்தார். கடந்த பிப்ரவரி மாதம் பினுவின் பிறந்தநாளை கொண்டாட அவரது தம்பி மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த கொண்டாட்டத்தில் நகரத்தின் முக்கிய ரவுடிகள் பலர் பங்கேற்றனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் அதிரடியாக அப்பகுதிக்கு சென்று ரவுடிகளை கைது செய்தனர். ஆனால் அங்கிருந்து பினு உள்ளிட்ட சிலர் மட்டும் தப்பிச் சென்றார். பின்னர் அவர் தாமாக வந்து சரணடைந்தார்.

    இந்நிலையில், கடந்த 23-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் ரவுடி பினுவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி, தினமும் மாங்காடு காவல்நிலையத்தில் கையெழுத்து போட உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், ஜாமீனில் வெளியான நாள்முதல் ரவுடி பினு கையெழுத்திட வரவில்லை எனவும், பினு தலைமறைவாகி விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #RowdiBinu #Abscond
    Next Story
    ×