search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு காதலியுடன் தஞ்சமடைந்த மெக்கானிக்
    X

    வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு காதலியுடன் தஞ்சமடைந்த மெக்கானிக்

    வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு மெக்கானிக் காதலியுடன் தஞ்சமடைந்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை பாடியூரைச் சேர்ந்தவர் சித்தன் மகன் வேலுமணி (வயது 24). கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பட்டிமட்டம் பகுதியில் சிறுவயதிலேயே குடிபெயர்ந்தார். மேலும் அப்பகுதியில் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    அதே பகுதியைச் சேர்ந்த மீனு (19). பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இருவருக்கு மிடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் பல்வேறு பகுதிகளில் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இதற்கு மீனு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

    அவரது பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என எண்ணிய காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி வடமதுரை அருகே பாடியூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.

    இதனிடையே மகளை காணவில்லை என கேரள போலீசில் மீனுவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மீனு மற்றும் வேலுமணி மேஜர் என்பதால் விருப்பப்படி செல்லலாம். இருந்தபோதும் கேரள போலீசில் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×