search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழி பசுமை சாலையில் நீர்வழி பாதையும் அமைத்தால் உதவியாக இருக்கும் - விவசாயிகள் கருத்து
    X

    8 வழி பசுமை சாலையில் நீர்வழி பாதையும் அமைத்தால் உதவியாக இருக்கும் - விவசாயிகள் கருத்து

    8 வழி பசுமை சாலையில் தேசிய நீர்வழி பாதையும் அமைத்து அதை அந்தந்த பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் இணைக்க அரசு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். #FarmersComment #GreenWayRoad
    பாப்பரெட்டிப்பட்டி:

    சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 5 ஆயிரம் ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதில் அரசு நிலம் ஆயிரம் ஹெக்டேர் ஆகும். 4 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வழியாக இந்த பாதை செல்லும். சேர்வராயன், கல்வராயன் மலை உள்பட 8 மலைகள் வழியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது.

    இந்த சாலை அமைக்கும் பகுதியில் 120 ஹெக்டேர் வனப்பகுதியும் வருகிறது. இந்த சாலையில் மொத்தம் 23 பெரிய பாலங்களும், 156 சிறு பாலங்களும், 9 மேம்பாலங்களும் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாலங்களுக்கு கீழ் 22 வாகன கீழ் வழிச்சாலையும், 2 பாலங்களுக்கு கீழ் இன்னொரு வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது. வனப் பகுதியில் 3 சுரங்கப் பாதைகளும், 8 சுங்க சாவடிகளும் அமைக்கப்படும்.

    லாரிகள் மற்றும் பஸ்கள் நிறுத்தும் இடம் 10 இடங்களில் அமைக்கப்பட உள்ளாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    பசுமை வழி சாலையில் தேசிய நீர்வழி பாதையும் அமைத்து அதை அந்தந்த பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் இணைக்க அரசு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்று பாப்பிரெட்டிப்பட்டி பகுதி விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    மழைக்காலங்களில் நீர்வழிப்பாதையில் செல்லும்போது அவற்றை ஏரி, குளங்களில் தேக்கினால் விவசாயத்திற்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் கூறினர்.

    கர்நாடக அரசு அணைகளில் தேங்கும் தண்ணீரை ஏரி, குளங்களில் நிரப்பி வருகிறது. அதுபோல தமிழக ஆறுகளில் இருந்து விணாக கடலில் கலக்கும் நீரை ஏரி, குளங்களில் சேமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #FarmersComment #GreenWayRoad
    Next Story
    ×