என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தாராபுரம் அருகே சுற்றுலா வேன் மோதி வாலிபர் பலி
தாராபுரம்:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பெரியலூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 20). மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் தங்கவேல் (27). கேரள மாநிலம் மூணாரை சேர்ந்தவர் ரெஜிபிலிப் (28). இவர்கள் 3 பேரும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தங்கி இருந்து அங்குள்ள காற்றாலையில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.
இன்று காலை இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தாராபுரம்- பொள்ளாச்சி ரோட்டில் சென்றனர். மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டிச் சென்றார். செட்டிப்பாளையம் அருகே சென்ற போது பொள்ளாச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற சுற்றுலா வேன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த தங்கவேல், ரெஜி பிலிப் ஆகியோர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்