search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணைவேந்தராக தொடர்வதில் சிக்கல் இல்லை - மேல் முறையீடு செய்யப்போவதாக செல்லத்துரை  பேட்டி
    X

    துணைவேந்தராக தொடர்வதில் சிக்கல் இல்லை - மேல் முறையீடு செய்யப்போவதாக செல்லத்துரை பேட்டி

    ஐகோர்ட்டால் தகுதியிழப்பு செய்யப்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணை வேந்தர் செல்லத்துரை இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார். #ViceChancellorAppointment #vicechancellorchelladurai

    மதுரை:

    மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் செல்லத்துரை. இவரது நியமனம் சட்ட விரோதமானது என்றும், அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த அந்தோணிராஜ், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. துணைவேந்தராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்ட ஐகோர்ட்டு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய மீண்டும் சிண்டிகேட், செனட் மற்றும் கவர்னரின் பிரதிநிதிகள் அடங்கிய தேடுதல் குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு 3 மாதத்திற்குள் புதிய துணைவேந்தரை சட்டத்துக்குட்பட்டு பரிந்துரைக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.

    இந்த நிலையில் ஐகோர்ட்டின் தீர்ப்பு குறித்து செல்லத்துரை கூறியதாவது:-

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறேன்.

     


    கடந்த ஓராண்டாக பல்கலைக்கழக வளர்ச்சிக்காக பல திட்டங்களை மேற்கொண்டுள்ளேன். ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளுடன் 28-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளேன்.

    துணைவேந்தர் பதவிக்கான அனைத்து தகுதிகளும் எனக்கு உள்ளது. நேர் காணலில் கூட அதிக மதிப்பெண் பெற்றேன். தகுதி அடிப்படையில் தான் துணை வேந்தராக தேர்வு செய்யப்பட்டேன.

    ஐகோர்ட்டின் இந்த உத்தரவை சட்ட ரீதியாக சந்திப்பேன். இறைவன் மிகப்பெரியவன் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.

    தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக தொடருவதில் எந்த சிக்கலும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐகோர்ட்டில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய செல்லத்துரை வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இன்னும் ஓரிரு நாளில் அப்பீல் செய்ய திட்டமிட்டுள்ளார். #ViceChancellorAppointment #vicechancellorchelladurai

    Next Story
    ×