என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
Byமாலை மலர்15 Jun 2018 7:24 AM GMT (Updated: 15 Jun 2018 7:24 AM GMT)
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் விதமாக உள்ளதால் அதனை நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:
நதிநீர் பங்கீடு தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு மசோதா ஒன்றை தயாரித்தது. இந்த மசோதாவுக்கு கடந்த புதன் கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், இந்த மசோதா மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் விதமாக உள்ளதால் மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்த மசோதாவின் படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஒரே மாதிரியான அணைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க முடியும். தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தை அமைக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த ஆணையம் நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
ஒரு மாநிலத்துக்கு சொந்தமான அணை, மற்றொரு மாநிலத்தில் அமைந்திருத்தால் மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் பணிகளையும், தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் மேற்கொள்ளும். இதன் மூலம் அணை தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகள் தீர்க்கப்படும்.
மாநில அரசுகள் மாநில அளவில் அணைகள் பாதுகாப்பு குழுவை அமைக்கவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில் உள்ள வல்லுநர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த அணைப் பாதுகாப்பு வல்லுநர்களுடனும் ஆலோசிக்கப்பட்டு இந்த மசோதா இறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மாநில அரசுகளின் கருத்துகளை கேட்ட பிறகே இந்த மசோதாவை சட்டமாக்க வேண்டும் எனவும் முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X