search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயிதே மில்லத் நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - எடப்பாடி பழனிசாமி நாளை மரியாதை
    X

    காயிதே மில்லத் நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - எடப்பாடி பழனிசாமி நாளை மரியாதை

    காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்பின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நாளை மரியாதை செலுத்த உள்ளார்கள்.
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்பின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி அளவில் சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

    இந்த நிகழ்ச்சியில், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞ அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×