search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாரமங்கலம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
    X

    தாரமங்கலம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

    தாரமங்கலம் அருகே வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற நபர்கள் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 55). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி அதே ஊரில் வெவ்வேறு இடத்தில் வசித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று மகேஸ்வரி தனது மகள் சுமதி வீட்டிற்கு சென்றார். இரவு பலத்த மழை பெய்ததால் அவரால் வீட்டிற்கு வர முடியவில்லை. இதனால் மகள் வீட்டிலேயே தங்கி விட்டார். மறுநாள் காலை அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பாத்ரூம் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகை மற்றும் 5ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. 

    இதுபற்றி மகேஸ்வரியிடம் அக்கம் பக்கத்தினர் கூறும்போது, மகேஸ்வரியின் மற்றொரு மகளான வேணி, அவரது மகன் நவப்பிரகாசம் மற்றும் அவரது நண்பர் வெங்கடாசலம் ஆகியோர் வீட்டருகே நடமாடியதாக தெரிவித்தனர்.
    இதையடுத்து மகேஸ்வரி தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் அவர், தனது மகள் வேணி மற்றும் பேரன் நவப்பிரகாசம் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ராஜு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
    Next Story
    ×