search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி விடுதலை வேங்கையினர் ஆர்ப்பாட்டம்
    X

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி விடுதலை வேங்கையினர் ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மீனவர் விடுதலை வேங்கையின் சார்பில் சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மீனவர் விடுதலை வேங்கையின் சார்பில் சுதேசி மில் அருகே போராட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்துக்கு நிறுவன அமைப்பாளர் மங்கையர் செல்வம் தலைமை தாங்கினார். கங்காதரன், திருமுகம், மோகன் முன்னிலை வகித்தனர். மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் மக்களை கொலை செய்யும் டெர்லைட் ஆவையை மூட வேண்டும், அறவழியில் போராடிய மக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றது காட்டு மிராண்டித்தனமான செயல். 13 பேரை சுட்டு கொல்ல காரணமாக இருந்த மாவட்ட கலெக்டர், போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், தமிழக முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    Next Story
    ×