search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10-ம் வகுப்பு தேர்வு - 9402 மாணவ-மாணவிகள் 481 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றனர்
    X

    10-ம் வகுப்பு தேர்வு - 9402 மாணவ-மாணவிகள் 481 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றனர்

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 9402 மாணவ-மாணவிகள் 481 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று முத்திரை பதித்து உள்ளனர்.
    சென்னை:

    10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் அறிவியல் பாடத்தில் தான் அதிகமான தேர்ச்சி இருந்தது. இந்த பாடத்தில் 98.47 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அதற்கு அடுத்தப்படியாக சமூக அறிவியலில் 96.75 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

    பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் வருமாறு:-

    1. மொழிப் பாடம்- 96.42
    2. ஆங்கிலம்- 96.50
    3. கணிதம்- 96.18
    4. அறிவியல்- 98.47
    5. சமூக அறிவியல்-96.75

    9402 மாணவ-மாணவிகள் 481 மதிப்பெண்ணுக்கு மேல் (மொத்த மார்க் 500) பெற்று முத்திரை பதித்து உள்ளனர். இதில் 6607 பேர் மாணவிகள். மீதியுள்ள 2795 பேர் மாணவர்கள் ஆவார்கள்.

    451-480 மார்க் வரை 56,837 பேரும், 426-450 மதிப்பெண் வரை 64,144 பேரும், 401-425 மார்க் வரை 76,413 மாணவ-மாணவிகளும் பெற்றுள்ளனர். 301-400 மதிப்பெண் வரை 3 லட்சத்து 66 ஆயிரத்து 84 பேர் பெற்று உள்ளனர்.
    Next Story
    ×