search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உசிலம்பட்டியில் மூதாட்டியிடம் 12 பவுன் நகை பறிப்பு
    X

    உசிலம்பட்டியில் மூதாட்டியிடம் 12 பவுன் நகை பறிப்பு

    காற்றுக்காக மாடி கதவை திறந்து வைத்து தூங்கிய மூதாட்டியிடம் 12 பவுன் தங்க சங்கிலியை மர்ம மனிதன் பறித்துச் சென்றான்.
    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் உள்ளது அன்னம்பார்பட்டி. இங்குள்ள மொக்கராஜ் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர், விவசாயி. இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 63).

    நேற்று இரவு வீட்டு மாடியில் படுத்திருந்தபோது தனலட்சுமி காற்றுக்காக பால்கனி கதவை திறந்து வைத்திருந்தார். இதனை பயன்படுத்தி இன்று அதிகாலை 3 மணி அளவில் மர்ம மனிதன் நைசாக வீட்டுக்குள் புகுந்துள்ளான். அவன் தனலட்சுமி கழுத்தில் கிடந்த 12 பவுன் தாலி சங்கிலியை நைசாக அபேஸ் செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டான்.

    நகை மாயமானது தெரிய வந்ததும் தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உசிலம்பட்டி டவுன் போலீசில் சந்திரசேகர் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

    காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்று இருப்பது உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×