என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உசிலம்பட்டியில் மூதாட்டியிடம் 12 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்22 May 2018 5:59 PM GMT (Updated: 22 May 2018 5:59 PM GMT)
காற்றுக்காக மாடி கதவை திறந்து வைத்து தூங்கிய மூதாட்டியிடம் 12 பவுன் தங்க சங்கிலியை மர்ம மனிதன் பறித்துச் சென்றான்.
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் உள்ளது அன்னம்பார்பட்டி. இங்குள்ள மொக்கராஜ் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர், விவசாயி. இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 63).
நேற்று இரவு வீட்டு மாடியில் படுத்திருந்தபோது தனலட்சுமி காற்றுக்காக பால்கனி கதவை திறந்து வைத்திருந்தார். இதனை பயன்படுத்தி இன்று அதிகாலை 3 மணி அளவில் மர்ம மனிதன் நைசாக வீட்டுக்குள் புகுந்துள்ளான். அவன் தனலட்சுமி கழுத்தில் கிடந்த 12 பவுன் தாலி சங்கிலியை நைசாக அபேஸ் செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டான்.
நகை மாயமானது தெரிய வந்ததும் தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உசிலம்பட்டி டவுன் போலீசில் சந்திரசேகர் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்று இருப்பது உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உசிலம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் உள்ளது அன்னம்பார்பட்டி. இங்குள்ள மொக்கராஜ் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர், விவசாயி. இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 63).
நேற்று இரவு வீட்டு மாடியில் படுத்திருந்தபோது தனலட்சுமி காற்றுக்காக பால்கனி கதவை திறந்து வைத்திருந்தார். இதனை பயன்படுத்தி இன்று அதிகாலை 3 மணி அளவில் மர்ம மனிதன் நைசாக வீட்டுக்குள் புகுந்துள்ளான். அவன் தனலட்சுமி கழுத்தில் கிடந்த 12 பவுன் தாலி சங்கிலியை நைசாக அபேஸ் செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டான்.
நகை மாயமானது தெரிய வந்ததும் தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உசிலம்பட்டி டவுன் போலீசில் சந்திரசேகர் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்று இருப்பது உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X