search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் பலி: நண்பர்கள் 2 பேர் படுகாயம்
    X

    மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் பலி: நண்பர்கள் 2 பேர் படுகாயம்

    ஊரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    செங்கல்பட்டு:

    செஞ்சி அருகே உள்ள கோவில் புறையூரை சேர்ந்தவர் முருகேசன்.  இவரது மகன் சுரேஷ் (வயது19). பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தார். இதையடுத்து சுரேஷ், சென்னையில் உள்ள கல்லூரியில் சேர முடிவு செய்து இருந்தார்.

    இதற்காக அவர் கல்லூரியில் விண்ணப்பம் வாங்குவதற்காக  அதே பகுதியை சேர்ந்த நண்பரான பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த அஜீத், சின்னராஜீ ஆகியோரும் மோட்டார் சைக்கிளில் சென்னைநோக்கி நேற்று நள்ளிரவு புறப்பட்டனர். இன்று உறவினர் வீட்டில் தங்கி விட்டு நாளை கல்லூரிக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில்  கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை  இழந்த மோட்டார் சைக்கிள் சாலைஒர தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார். அஜீத், சின்னராஜீக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    Next Story
    ×