search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூர் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
    X

    வில்லியனூர் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

    வில்லியனூர் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கோர்க்காடு கிராமம் அம்மன் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவரது மனைவி லட்சுமி. இருவரும் கட்டிட தொழிலாளிகள். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இதற்கிடையே செல்வத்துக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று செல்வம் உடல்நலக்குறை வால் கட்டிட வேலைக்கு செல்லவில்லை. லட்சுமி மட்டும் கட்டிட வேலைக்கு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் செல்வத்துக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்வம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×