என் மலர்
செய்திகள்

நாகையில் திறன் பயிற்சி விழிப்புணர்வு பிரசார வாகனம்
நாகையில் திறன் பயிற்சி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வு பிரசார மின்னணு திரை வாகனத்தை கலெக்டர் சுரேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், திறன் பயிற்சிக்கு பதிவு செய்தவர் களுக்கு அடையாள அட்டையை வழங்கினார். அப்போது கலெக்டர் கூறிய தாவது:-
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் வாயிலாக வழங்கப்பட்டு வரும் பல்வேறு திறன் பயிற்சிகள் குறித்து கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்திலுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திறன் பயிற்சிகள் மற்றும் அவற்றைப் பற்றிய விவரங்கள் அடங்கிய விளம்பர படத்தினை நாகை மாவட்டம் முழுவதும் செய்தி மக்கள் தொடர்புத்துறை மின்னணு திரை வாகனம் மூலம் திரையிடப்பட்டு இளைஞர்களிடையே பிரசாரம் செய்யப்படவுள்ளது.
இதன் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்றோருக்கு பல்வேறு திறன் பயிற்சிகள் பற்றிய விவரங்கள் எளிதில் சென்றடையும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) பிரகாசம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஜீவானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வு பிரசார மின்னணு திரை வாகனத்தை கலெக்டர் சுரேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், திறன் பயிற்சிக்கு பதிவு செய்தவர் களுக்கு அடையாள அட்டையை வழங்கினார். அப்போது கலெக்டர் கூறிய தாவது:-
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் வாயிலாக வழங்கப்பட்டு வரும் பல்வேறு திறன் பயிற்சிகள் குறித்து கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்திலுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திறன் பயிற்சிகள் மற்றும் அவற்றைப் பற்றிய விவரங்கள் அடங்கிய விளம்பர படத்தினை நாகை மாவட்டம் முழுவதும் செய்தி மக்கள் தொடர்புத்துறை மின்னணு திரை வாகனம் மூலம் திரையிடப்பட்டு இளைஞர்களிடையே பிரசாரம் செய்யப்படவுள்ளது.
இதன் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்றோருக்கு பல்வேறு திறன் பயிற்சிகள் பற்றிய விவரங்கள் எளிதில் சென்றடையும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) பிரகாசம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஜீவானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






