search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் அருகே மது பாட்டில்கள் பதுக்கிய கும்பல் கைது
    X

    கூடலூர் அருகே மது பாட்டில்கள் பதுக்கிய கும்பல் கைது

    கூடலூர் அருகே மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர்:

    கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 1-வது வார்டு அரசமர தெருவில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது ஒரு இடத்தில் மதுபாட்டில் பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது.

    பசும்பொன் நகரை சேர்ந்த ராஜேந்திரன் (32) என்பவரை கைதுசெய்து அவரிடம் இருந்து 110 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கீழகூடலூர் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தெய்வேந்திரன் (55) என்பவர் தனது வீட்டு அருகே மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரையும் கைது செய்து 130 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவருடன் விற்பனையில் ஈடுபட்ட குள்ளப்ப கவுண்டன்பட்டியை சேர்ந்த மனோஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×